
இந்த பதிவுல எனக்கு பிடிச்ச சில Rare யேசுதாஸ் பாடல்கள பகிர்ந்திருக்கேன். கேட்டு பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.
1.ரவிவர்மன் எழுதாத கலையோ..
பொதுவா நான் பாட்டு கேட்கரதோடு சரி பாடமாட்டேன். ஆனா இந்த பாட்டுல வர்ற "ல ல லால ல ல லால" hum பண்ணாம இருக்க முடியாது.. எனக்கு பிடித்த sweet Melodies song இது.
படம் : வசந்தி
பாடியவர்கள் : யேசுதாஸ், சித்ரா
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : சந்திர போஸ்
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ..
கவிராஜன் எழுதாத கவியோ..
கரை பொட்டு நடக்காத நதியோ..
ரவிவர்மன் எழுதாத கலையோ..
விழியோர சிருபார்வை போதும்..
நான் விலையாடும் மைதானம் ஆகும்..
இதழோர சிரிப்பொன்று போதும்..
நான் இளைப்பாறும் மலர் பந்தல் ஆகும்..
கையேந்தினால் வந்து வீழ்ந்தேன் பெண்ணே..
கருங்கூந்தலில்.. நான் தொலைந்தேன் கண்ணே...
ரவிவர்மன் எழுதாத கலையோ..
பூமாலையே.. உன்னை மணப்பேன்..
புதுசேலை கசங்காமல் அணைப்பேன்
மகாராணி போல் உன்னை மதிப்பேன்
உன் மடி மீது என் ஜீவன் முடிப்பேன்...
என் மேனியில் இரு துளிகள் விழும்..
அது போதுமே.. ஜீவன் அமைதி கொல்லும்..
ரவிவர்மன் எழுதாத கலையோ..
2.எந்தன் பாடல்களில் நீ நீலம்பரி...
80 'ல நம்ம T . ராஜேந்தர் சில நல்ல பாடல்கள தந்திருக்கார். அதுல என்னோட Favourite Song. இந்த பாட்டுல வர்ற வரிகள் நல்லா இருக்கும்.
படம் : உறவை காத்த கிளி
பாடியவர்கள் : யேசுதாஸ், சசிரேகா
பாடலாசிரியர் & இசை : T. ராஜேந்தர்
எந்தன் பாடல்களில் நீ நீலம்பரி...
உன்னை பாடாமலே மனம் தூங்காதடி...
தீம்தன தீம்தன தீம்தன
தீம்தன தீம்தன தீம்தன
எந்தன் பாடல்களில் நீ நீலம்பரி
உன்னை பாடாமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கை கூட உன் கழுத்து
மிஞ்சுதடி வஞ்சி மலரே.... ஓ...
நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு
சொல்லுதடி வைர சிலையே..
எந்தன் பாடல்களில் நீ நீலம்பரி
உன்னை பாடாமலே மனம் தூங்காதடி
வசந்தம் என்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை
வசந்தம் என்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை
பொய்கை தாமரையில்
புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா....
போதை ஏற்றி கொல்ல
தாளம் போடுதடி அம்மம்மா....
பொய்கை தாமரையில்
புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா....
போதை ஏற்றி கொல்ல
தாளம் போடுதடி அம்மம்மா....
பொய்கை வண்டாய் உன் கை மார
மங்கை நாண சேவை செய்தாய்
வைகை போல் நாணத்தில் வலைகின்றேனே
வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே
எந்தன் பாடல்களில் நீ நீலம்பரி..
பச்சை அரிசி என்னும்
பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம்
வேகிரது உன் நினைப்பு
பச்சை அரிசி என்னும்
பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம்
வேகிரது உன் நினைப்பு
வார்த்தை தென்றல் நீ வீசும்போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் சில்லென்று நனைகின்றது
சிந்தும் தேன் கூட சிந்தொன்று புனைகின்றது
எந்தன் பாடல்களில் நீ நீலம்பரி..
3.துள்ளி துள்ளி போகும் பெண்ணே..
ஊமை விழிகள் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர்களின் மற்றொரு படம். யேசுதாசின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
படம் : வெளிச்சம்
பாடியவர் : யேசுதாஸ்
இசை : மனோஜ் - க்யான்
துள்ளி துள்ளி போகும் பெண்ணே
சொல்லிக்கொண்டு போனால் என்ன..
கன்னி உந்தன் பேர் என்ன..
வெள்ளி கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சம் போவதென்ன..
துள்ளி துள்ளி போகும் பெண்ணே..
பூமி என்னும் பெண்ணும்
பொட்டு வைத்துக்கொண்டு
பச்சை ஆடை கட்டி பார்த்தாள்..
ஓடை பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்..
பூமி என்னும்..
பூமி பெண்ணுக்கும் கன்னி பெண்ணைப் போல்
நெஞ்சில் ஈரம் உண்டு..
துள்ளி துள்ளி போகும் பெண்ணே..
அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்..
பூச்சிந்தும் பூமியெல்லாம் நான் வணங்கும் காதலி..
அந்தி வெளிச்சம்..
மண்டியிட்டு நான் முத்தம் தரவா..
தென்றல் பெண்ணே வா..வா.. வா..
துள்ளி துள்ளி போகும் பெண்ணே..