
இந்த பதிவுல P.சுசிலா , S. ஜானகி பாடின நான் ரசிச்சு கேட்கிற பாடல்கள பகிர்ந்திருக்கேன்.
நாளை இந்த வேளை..
சுசிலா இந்த பாடலுக்கு தேசிய விருது வாங்கிருக்காங்க. அவங்க கலந்துக்கிற மேடை நிகழ்ச்சிகள்ல இந்த பாட்ட கண்டிப்பா கேட்கலாம். இந்த பாட்ட கண்ணதாசன் தான் எழுதினார்னு நெனச்சேன், எழுதினது வாலி. " நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா.. இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா.. தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு ". வாலியோட அற்புதமான பாடல் வரிகளுக்கு விஸ்வநாதன் இனிமையான மெட்டு அமைத்திருப்பார்.
படம் : உயர்ந்த மனிதன்
இசை : மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன்
பாடியவர் : P.சுசிலா
பாடலாசிரியர் : வாலி
பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
வண்ண விழியன் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
வண்ண விழியன் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
பெண்மையே உன் மேன்மை கண்டு கலைஞன் ஆகினான் கலைஞன் ஆகினான் ( நாளை இந்த..)
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணமேன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன் மயக்கம் கொண்டதேன்.. ( நாளை இந்த..)
இந்த பாடலை கேட்க..

புத்தம் புதுக் காலை..
இந்த பாட்ட visual ல எடுக்காம விட்ட பாரதிராஜாவுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஏன்டா உனக்கு "செந்தூரபூவே செந்தூரபூவே என் மன்னன் எங்கே.." பாட்டெல்லாம் தெரியாதான்னு கேட்காதிங்க. "நாளை இந்த வேளை பார்த்து.. " பாட்டுக்கும் "செந்தூரபூவே செந்தூரபூவே.." பாட்டுக்கும் ஒரே feel தான். அதான் இந்த பாட்ட பகிர்ந்திருக்கேன். அருமையான இந்த பாடல FM ல தான் கேட்க முடியும்.
படம் : அலைகள் ஓய்வதில்லை
இசை : இசைஞானி இளையராஜா
பாடியவர் : S. ஜானகி
பாடலாசிரியர் : வைரமுத்து*
புத்தம் புதுக் காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
(புத்தம் புதுக் காலை.. )
பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்
(புத்தம் புதுக் காலை.. )
வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவைகூடுது
(புத்தம் புதுக் காலை.. )
இந்த பாடலை கேட்க..
No comments:
Post a Comment