Friday, July 2, 2010

யேசுதாஸ் ஹிட்ஸ்



சோகப்பாடல், மெலடி, துள்ளல், Folk சாங்னு எல்லாத்திலையும் சிறப்ப பாடுறவரு தான் நம்ம யேசுதாஸ். ஆடல் கலையே தேவன் தந்தது பாட்டும் பாடுவாரு.. உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை பாட்டும் பாடுவாரு.. தண்ணி தொட்டி தேடி வந்த பாட்டும் பாடுவாரு.. கனவு காணும் வாழ்க்கை யாவும் களைந்து போகும் கோலங்கள் பாட்டும் பாடுவாரு.. இந்த பதிவுல யேசுதாஸ் பாடின சில Variety Songs பகிர்ந்திருக்கேன் கேட்டு பாருங்க.

Folk Song

செப்புக்குடம் தூக்கி போற..

யேசுதாஸ் பாடின ரொம்ப வித்யாசமான பாடல் இது. இந்த பாடலில் ஒரு நையாண்டித்தனம் இருக்கும். என்னுடைய பள்ளி விடுதியில் சனி ஞாயிறு அன்று பாடல்கள் போடும் போது கண்டிப்பா இந்த பாடலையும் போடுவாங்க. " ஏய் ஒன்ன தான் எங்கே பாக்கிற " இந்த வரி பாடலில் இடை இடையே வரும். வாணி ஜெயராம் யேசுதாஸ் combination ல ஹிட் ஆனா பாடல்கள, நல்ல Folk Song இது.

படம்: ஒத்தையடி பாதையிலே
இசை : சங்கர் கணேஷ்
பாடியவர்கள் : யேசுதாஸ், வாணி ஜெயராம்

ஏய் ஒன்ன தான் எங்கே பாக்கிற
ஒன்ன தான் அட ஒன்னத் தான்

செப்புக்குடம் தூக்கி போற செல்லமா
நான் விக்கி போறேன் தாகத்திலே நில்லம்மா..
கக்கத்தில வச்ச குடம் செல்லையா
இது கண்டவங்க தாகத்திக்கு இல்லையா..

(செப்புக்குடம் தூக்கி)

ஏய் ஒன்ன தான் எங்கே பாக்கிற
ஒன்ன தான் அட ஒன்னத் தான்




Duet Song

பூ மேலே வீசும் பூங்காற்றே..

அங்காடி தெரு படம் பாத்தவங்க இந்த படத்தையும் பாக்கலாம். அங்காடி தெரு படத்தில climax 'னாச்சும் positive முடிச்சிருப்பாங்க. ஆனா இந்த படத்தில அதுவும் missing. ராஜாவோட இசைல வரும் பூமேலே வீசும் பூங்காற்றே பாடல் பாட்டுக்காகத்தான் KTV ல படம் பார்த்தேன். படம் அவ்வளவு சோகம்.

படம் : எச்சில் இரவுகள்
இசை : இசைஞானி இளையராஜா
பாடியவர்கள் : யேசுதாஸ், வாணி ஜெயராம்

பூ மேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீச மாட்டாய
பூ மேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீச மாட்டாய
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
கண்வாசலில் உன் வாசமோ..
கண்வாசலில் உன் வாசமோ..

( பூ மேலே )




Sad Song

பூங்காத்தே பூங்காத்தே போனவள..

யேசுதாஸ் பாடிய சோகப்பாடல்களில் இது கொஞ்சம் Rare Song. இந்த பாடலில் வரும் வரிகள் நல்லா இருக்கும். பாடல் எழுதியது கங்கை அமரனா வைரமுத்துவானு சரியா தெரியல. பாடல் கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.

படம் : நாளெல்லாம் பௌர்ணமி
இசை : கங்கை அமரன்
பாடலாசிரியர் : வைரமுத்து*

பூங்காத்தே பூங்காத்தே போனவள பூங்குயில பாத்தியா
தாங்காம தவிச்சேனே சின்னவள என்னிடத்தில் சேர்பியா..




Melody Song

காக்கை சிறகினிலே நந்தலாலா..

ஏழாவது மனிதன் படத்தில வர்ற பாரதியார் பாடல்கள்ல இந்த பாடல் ரொம்ப நல்லா இருக்கும். இசை கோர்ப்பு தான் கொஞ்சம் இரைச்சல இருக்கும்.

படம் : ஏழாவது மனிதன்
இசை : L. வைத்தியநாதன்
பாடலாசிரியர் : மகாகவி பாரதியார்

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா