
கௌதம் மேனன் படத்துல கதாநாயகன் கதைய அழக Narrate பண்ணி பார்வையாளர்கள பத்து நிமிசத்துல கதைல ஒன்ற வச்சிடுவாரு. அதே மாதிரி ஹீரோ ஹீரோயின பார்த்த அடுத்த நொடியே (Love at first sight) உருகி பாட ஆரம்பிச்சிடுவாரு. அழகிய தீயே என்னை.. முன்தினம் பார்த்தேனே.. VTV'ல "ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே Hosana". இது அவரோட ஸ்டைல்.
A.R.Rahman னோட கிடார் மியூசிக்கோடு.. மனோஜ் பரமஹம்ச கேமராவின் வழியில்.. காதல் நம்மள போட்டு தாக்கனும் தலைகிழ திருப்பனும் நிலைய இருக்கணும் அது தான் லவ்னு நம்ம ஹீரோ Narrate பண்ணி ஆரம்பமாகுது படம்.
ஜெஸ்ஸியா த்ரிஷா, இந்த கேரக்டர் பற்றி சொல்லனும்ன.. பொதுவா பசங்களுக்கு பொண்ணு அழகா இருந்த இவ நம்ம Life fullல இருந்த எப்படி இருக்கும்னு தான் நினைப்பாங்க ஆனா பொண்ணுங்க Calculative mind'டோடு தான் இருப்பாங்க. இருக்கணும். கார்த்திக்கா சிம்பு Asst. Director'a நடிச்சிருக்கார்.
தெளிஞ்ச நீரோடைய போற ஜெஸ்ஸி வாழ்கையில கார்த்திக் வர்றான். உன்னை எனக்கு புடிச்சிருக்கு ஆனா எனக்கு வேண்டாம். நாம ஒன்னு சேர மாட்டோம். இந்த காதல் தோல்வில தான் முடியும்னு ஜெஸ்ஸி சொல்லியும் கார்த்திக் தொடர்ந்து தன்னுடைய காதல்ல வெற்றி பெற முயற்ச்சி செய்றாரு. காதலில் வெற்றி பெற்றாரா. குழப்பமான மனநிலையில் இருந்த ஜெஸ்ஸி தன் காதலனுக்காக வீட்டை தாண்டி வந்தாரா. Climax'ல ஜோடி சேர்ந்துச்சான சேர்ந்துச்சு ஆனா அது எந்த ஜோடின்னு வெண்திரையில பாருங்க..
படத்தில் என்னை கவர்ந்தவை:
குழப்பமே இல்லாம நூல் புடிச்சாப்ள சொல்லிருக்கும் கதை. சொன்னவிதம்.
பார்வையாளனின் கண்களை உறுத்தாத கேமரா கோணம். ஈரம் படத்துல்ல வாங்குன நல்ல பேர தக்க வச்சுகிட்டார்.
சிம்பு, த்ரிஷா நடிப்பு.
தாமரையின் பாடல் வரிகளுக்கு ரஹ்மானின் அற்புதமான இசை.
ஹோசன, ஓமணப்பெண்ணே பாடலும் படமாக்கிய விதமும் (Train Episode). த்ரிஷாவ ரொம்ப அழகா காட்டியிருப்பாங்க.
ஸ்ரேயா கோஷல், ரஹ்மான் பாடிய " ஒரு நாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன் உனை நான் கொள்ளாமல் கொன்று புதைத்தேன் மன்னிப்பாயா.. உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் " அந்த situation 'னுக்கு தேவையான feel கொடுத்தது.
ஆரோமலே ரொம்ப எதிர்பார்த்தேன். It's ok.
ரஹ்மானின் பின்னணி இசையும் ஆங்காங்கே ஹைக்கூ கவிதை போல வரும் வசனங்களும் படத்திற்கு இன்னும் அழகு..
சிம்பு: உன்ன ட்ரைன்ல பார்த்த உடனே friendsa நாம இருப்போம்னு சொன்னதெல்லாம் உடைஞ்சு போச்சு.. This is love.. I am crazy about you.. and mad about you.. இந்த சீன் ரொம்ப நல்ல எடுத்திருப்பாரு..
த்ரிஷா: உன் கண் வழிய என்ன யாரும் பார்க்கல போல..
சிம்பு: எதாவது புடிக்கலனா வேம நடந்து போயிடுவ அவள front'ட விட back'ல தான் அதிக தடவ பார்த்திருக்கேன். Theatrela என்ன புரிஞ்சாங்கனு தெரியல அந்தக் கத்து..
சிம்பு: இப்ப கூட எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன்.. நினைக்காத எல்லாம் முடிஞ்சு தான் போச்சுன்னு சொன்னா.
சிம்பு: காதல் ஒரு வலி. தேடி போய் யாரையும் லவ் பண்ண முடியாது அதுவா நடக்கணும் நம்ம போட்டு தாக்கனும். ஆரம்பத்தில வந்த அதே வரிகளோடும், நம் இதயத்தில் கொஞ்சம் வலிகளோடும் படம் நிறைவாகும்.
வாழ்த்துக்கள் கெளதம் மேனன்.
1 comment:
Great Review Buddy...
Cooooooollll....
Post a Comment