Thursday, March 25, 2010

எனக்கு பிடித்த யேசுதாஸ், ஜெயச்சந்திரன் பாடல்கள்

நான் ரசிச்சு கேட்கிற சில பாடல்கள உங்களோடு பகிரலாம்னு தான்..



படம் : அவள் அப்படித்தான்
இசை : இளையராஜா
பாடல் : உறவுகள் தொடர்கதை..

கொஞ்சம் சோகமா இருந்த இந்த பாட்ட கேட்பேன் ஆறுதலா இருக்கும்.. " உன் நெஞ்சிலே பாரம்.. எதற்காகவோ ஈரம்.. கண்ணீரை நான் மாற்றுவேன்.. வேதனை தீரலாம்.. வெறும் பனி விலகலாம்.. ".



படம் : ஸ்ரீ ராகவேந்திரா
இசை : இளையராஜா
பாடல் : ஆடல் கலையே ..

ராஜாவோட இசைல நான் ரொம்ப விரும்பி கேட்கிற பாடல். யேசுதாஸ் அவ்வளவு அற்புதமா பாடியிருப்பாரு. வீணை மிருதங்கத்த ராஜா அழகா பயன்படுத்தியிருப்பாரு..





படம் : சிந்து பைரவி
இசை : இளையராஜா
பாடல் : பூமாலை வாங்கி..

ராஜா அதிகமா பயன்படுத்துற வாத்தியம் Violin, Flute தான். இந்த பாட்டுல violin, Flute, வீணைய நல்லா பயன்படுத்தியிருப்பாரு.. "நேற்று சபதம் எடுத்துவிட்டான் குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்.. மீண்டும் அவள் முகம் நினைத்து விட்டான் சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்"
வைரமுத்துன்னு நெனைக்கிறேன்..






படம் : கடலோர கவிதைகள்
இசை : இளையராஜா
பாடல் : கொடியிலே..

ஜானகியோடு இந்த பாட்ட ஜெயச்சந்திரன் பாடியிருப்பாரு.. அருமையான இசை. அழகான வரிகள்.



படம் : மே மாதம்
இசை : ரஹ்மான்
பாடல் : என் மேல் விழுந்த..

சித்ராவுடன் சேர்ந்து பாடியிருப்பார் ஜெயச்சந்திரன். மென்மையான பாடல்.



படம் : பென்பட(1975)
இசை : R.K.Shekar, A.R.Rahman
பாடல் : வெள்ளித்தேன் கிண்ணம் போல்..

ஜெயச்சந்திரன் பாடிய இந்த மலையாள பாடலை, ரஹ்மான் தன் 9 வயதில் அப்பாவோடு சேர்ந்து இசையமைத்தார்னு சொல்லுறாங்க.. நம்புவோமாக..

No comments: