Wednesday, April 14, 2010

சங்கத்தில் பாடாத கவிதை - ஆட்டோ ராஜா (1982 )




2006 -2007 ஆம் ஆண்டு சென்னைல வேலை இல்லாம சுத்திகிட்டு இருந்த காலத்துல ஆறுதலா இருந்தது இளையராஜாவோட பாடல்கள் தான்.. இரவு எல்லா பன்பலையிலும் நம்ம ராஜாவோட பாட்டு தான் விதவிதமான வர்ணனைகளோடு பாடிட்டிருக்கும். அப்படி ஒரு நாள் கேட்ட பாடல் தான் "சங்கத்தில் பாடாத கவிதை". ராஜா இந்த பாட்ட ஜெயா டிவி concert ல ஹம் பண்ணிருப்பாரு. ஸ்கூல் படிக்கும் போது நண்பர்களோடு பாட்டு புஸ்த்தகம், பாட்டுக்கு பாட்டுனு பாடலோடே இருந்ததுனால படம் பேரு ஆட்டோ ராஜான்னு கண்டு பிடிச்சிட்டேன்.


நானும் அண்ணனும் இந்த பாட்ட டவுன்லோட் பண்ணலாம்னு தேடுதல் வேட்டைல Google ல இறங்குனோம். ஆட்டோ ராஜான்னு போட்டா ஏதோ சிரஞ்சீவி படம் வருது. ஒவ்வொரு நேரம் பண்பலைல "சங்கத்தில் பாடாத.." ராஜா குரல் வந்தவுடனே, என்னோட 6600 போண்டா செட்ல ரெகார்ட் பண்ணி வச்சிக்கிருவேன். கேட்டு பாப்பேன் ஒரே இரைச்சல இருக்கும். இப்படி சில நாள் போச்சு.

Youtube ல எனக்கு அக்கௌன்ட் இருந்தது. அப்பப்ப எதாவது நல்ல video songs டவுன்லோட் செஞ்சுக்குவேன். Youtube லையும் நம்ம பாட்டு இல்லை. கொஞ்சம் site ல தமிழ் வீடியோ songs, லொள்ளு சபா எல்லாம் இருந்தது. நமக்கு தேவையான சரக்கும் அங்க இருந்துச்சு ஒடனே லவட்டிகிட்டு வந்திட்டேன். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு Youtube ல upload பண்ணிட்டேன். நான் google ல தேடும் போது பயன்படுத்தினதே "சங்கத்தில் பாடாத கவிதை - ஆட்டோ ராஜா (1982 )" Title ல கொடுத்தேன். இந்த ரெண்டரை வருசத்துல 131000 க்கும் அதிகம் பேர் பார்த்திருக்காங்க.




இசை : இளையராஜா
கவிஞர்: புலமைபித்தன்*
பாடியவர்கள்: இளையராஜா, S .ஜானகி


தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை - இதை
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையுடன் என் முன்னே யார் வந்தது

கை என்றே செங்கந்தல் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இணைகளை
நீ சொன்னால் நான் நம்பிவிடவோ
மை கொஞ்சம்
பொய் கொஞ்சம்
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்

அந்திபோர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித்தேன் பாய்கின்ற உறவை

அந்திபோர்..
கண்ணுக்குள் என்னென நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்

ஆடை ஏன் உன்மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும் மெய் தொட்டும்
காமத்தில் தூங்கத விழியும்
சந்திப்பில் என்னென்ன நயம் தமிழ்

சங்கத்தில் பாடாத..

1 comment:

Gangaram said...

Raj.... indha murai nalla korvaya yeluthi irukka... adhoda... lyrics sethu koduthathu.. miga arumai... nalla irukku raj... keep rocking..